January 15, 2012

நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் 'மானிட்டர்'!


நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கிறது. நகங்களை நலமாக வைத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...
* நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்று நோய் ஏற்படவும் காரணமாகிறது.
* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.
*  சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணையை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.

December 22, 2011

யோகாசனம் செய்ய வேண்டுமா?

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற் பயிர்சி    தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும்.  யோகாசனம் என்பது அந்த காலத்தில்  வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறைவகள் இவைகளின் செயல்களை பார்த்து வடிவமைத்தார்கள் என்று பல தகவல்கள் சொல்கின்றன. இருந்தாலும் இதை இதை நாம் உடல் பயிற்சிக்காக செய்யலாம். 


ஏன் யோகாசனம் செய்யவேண்டும் : 
  • இன்றைய  கணினி உலகில் அனிவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டானாம் “பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட ஆசை வரும்” என்பது போல்  நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.
  • மருத்துவரிடம் சென்று அவர் தரும் வேதிப்பொருளை (மாத்திரைகளை) வாங்கி சாப்பிடுவதை விட   இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு  காணப்படும்.

December 15, 2011

மிகப் பிரபலமாக பிலிப்பைன் நடிகை இஸ்லாத்தை ஏற்றார்


ஒரு மனிதனின் மனத்தில் நேர் வழி வருவது எந்த நேரம் என்று யாருக்கும் தெரியாது. பிலிப்பைனில் மிகப் பிரபலமாக அறியப்பட்ட குயினி படில்லா தற்போது ஹதிஜாவாக தனது பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாமிய சங்கமத்தில் ஐக்கியமாகி உள்ளார். கோடிக்கணக்கான வருமானம் பேரும் புகழும் இவரைத் தேடி வரும்பொழுது அனைததையும் உதறி விட்டு மறுமை வாழ்வே நிரந்தரம் என்ற முடிவுக்கு வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சமீபத்தில் ஹஜ் கடமையை முடிப்பதற்காக ஜெத்தா வந்த அவரை சகோதரர்கள் பேட்டி எடுத்தனர். தனது பழைய வாழவில் செய்த தவறுகள் எல்லாம் புனித ஹஜ்ஜின் மூலம் துடைத்தெறியப்படடிருப்பதாகவும், இனி வரும் காலங்களில் உண்மையான முஸ்லிமாக வாழ முயற்ச்சிப்பேன் என்றும் ஆனந்த கண்ணீரோடு அந்த பெண் சொல்லும் அழகை பாருங்கள்.

December 10, 2011

வடகரை பள்ளி மாணவிகள் (பயோ-டீசல்) கண்டுபிடிப்பு!!

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், வடகரை ஹாஜாசாரா அம்மாள் மெட்ரிக்  பள்ளி மாணவிகள் உருவாக்கிய பயோ-டீசல் செயல்முறை விளக்கம் நாகை   மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களை பாராட்டி ஆட்சியர் பேசியது:இந்தப் பள்ளியின் மாணவிகள் 2 பேர், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் புங்கம் மரத்தின் விதையிலிருந்து பயோ-டீசலை உருவாக்கி, அதன் மூலம் காரை இயக்கி காட்டியுள்ளனர். இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய மாணவர்களிடம் அதிகமாகவே உள்ளது. இதுபோன்று இன்னும் பல்வேறு கண்டுபிடிப்புகளையும் கண்டறிய மாணவர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். பயோ-டீசல் கண்டுபிடிப்பு தொடர்பாக மரபு சாரா எரிசக்தி

November 30, 2011

திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக் கொள்வதற்கு சில வழிகள்!!


திருமண பந்தத்தில் இணைய இருக்கும் மணப் பெண்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக் கொள்வதற்கு சில வழிகாட்டல்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம். திருமணம் ஆனாவர்களும் இதை பின்பற்றலாம்!!
1. உங்களது கணவன் விரும்புபவற்றை அறிந்துகொள்ளுங்கள். அவற்றை நிறைவேற்றுங்கள். அவர் வெறுப்பவற்றை அறிந்துகொண்டு அவற்றை விட்டுவிடுங்கள்.
2. கணவனுடன் பொய் பேச வேண்டாம். நீங்கள் அவருடன் தெளிவாக நடந்துகொள்ளும்போது அவர் நீங்கள் தவறிழைத்தாலும் மன்னித்து விடுவார். மாற்றமாக நீங்கள் பொய் பேசினால் அவர் உங்களை நம்ப மாட்டார். அல்லாஹுத்தஆலாவும் மனிதனின் மறதிக்கும் தவறுக்கும் அவனைத் தண்டிப்பதில்லை. ஆனால், பொய் பேசினால் அவன் தண்டிக்கப் படுவான்.

November 23, 2011

RTO - ஆன்லைன் சர்வீஸ்


அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்   கொண்டிருந்த வட்டார போக்குவரத்து கழகத்தின் (RTO) ஆன் லைன் சர்வீஸ் 80% இன்று காலை முதல் செயல்ப்படும். மீதமுள்ள ஆன்லைன் சேவைகளூம் டிசம்பர் 3ஆம் தேதி முதல் செய்யபடும். ஒவ்வொரு RTO அலுவுலகத்திலும் இப்பொழுது என்ன நம்பர் சீர்யல் ஓடுகிறது TN - 13 - XX - XXXX ,

என்ன வி ஐ பி நம்பர் இருக்கிறது, லைசன்ஸ் ஆன்லைன் அப்ளிகேஷன், உங்களின் டிரைவிங் லைசன்ஸ் தற்போதைய நிலமை, ஒவ்வொரு வாகனத்திற்க்கும் ரோடு டாக்ஸ் ஆன்லைனில் செலுத்துதல், கன்டக்டர் உரிமம் புதுபித்தல்,

November 12, 2011

கணினியை பற்றிய தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!!!


(1) கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய.. .

பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும். 

இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் . எந்த சேதமும் ஏற்படாது.

November 3, 2011

இனி...கடல்நீர் எரிபொருள்..!


ஆமாம்...! அதிசயம்தான்..! ஆனால் உண்மை..! 'கடல்நீரை எரிக்க முடியும்' என்று அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தி விட்டார்கள்..! ஆக, இனி... கடல்நீர்... எரிபொருள்...!


      சென்ற மாதம் என்னுடைய செல்ஃபோன் பற்றிய இடுகைக்காக, பல தளங்களை தேடிப்படித்தபோது, ஒரு தளம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதில் கண்ட 'அந்த அதிசயம்'  என்னுடைய அப்பதிவிற்கு சம்பந்தமில்லாத விஷயம் என்பதால், 'அதை, விபரமாய் பிறகு சாவதானமாய் படித்துக்கொள்ளலாம்' என்று அப்போதைய செல்ஃபோன் பதிவு போடும் அவசரத்தில் புக்மார்க்கில் சேமித்து வைத்து விட்டு... பின்னர் வழக்கம் போல அதை படிக்காமல் மறந்தும் போனேன்..... :)

October 25, 2011

நீங்கள் பொய்யராக மாறிவிட எளிய வழிகள்! இதோ !!!


தலைப்பை படித்தவுடன் உங்களில் சிலர் கதிகலங்கிப் போயிருப்பீர்கள் ஆம் இப்படிப்பட்ட கலக்கம் எனக்கு ஏற்பட்டதன் விளைவுதான் இந்த கட்டுரை.

சகோதர, சகோதரிகளே பயப்படவேண்டாம்! இந்த கட்டுரையில் வழிகேட்டின் பாதையை தோலுறித்துக்காட்டி அதன்மூலம் வழிதவறிவிடாதீர்கள் என்று அழகிய முறையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது எனவே பொறுமையாக சிந்தித்து படியுங்கள் நீங்கள் உண்மையாளர்களாக மாற இந்த கட்டுரை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். (அல்ஹம்துலில்லாஹ்)!

நீங்கள் பொய்யர் என்பதற்கு நற்சான்றிதழ் பெற வேண்டுமா?

நீங்கள் கேள்விப்படும் ஆதாரமற்ற ஊடகச் செய்திகளையெல்லாம் அப்படியே பரப்பிவிடுங்கள் அது போதும் நீங்கள் பொய்யர் என்பதற்கான நற்சான்றிதழ். ஆம் இதைத்தான் நம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகாக தெளிவாக கூறிச் சென்றுள்ளார்கள் ஆதாரம் இதோ

ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)(நூல்: முஸ்லிம் 6 )

October 6, 2011

பிரச்னை குர்ஆனில் இல்லை; நம்மிடம்தான் - திரு.சுஜாதா ரங்கராஜன்


பத்திரிக்கையாளர், பன்னூலாசிரியர்,கணிஞர், வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்ட,தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறிந்த சுஜாதா என்று அறியப்பட்டு சமீபத்தில் மறைந்த திரு.ரங்கராஜன் அவர்கள் எழுதிய ஓரிரு நாவல்களைப் படித்திருக்கிறேன். சுவாரஸ்யமான எழுத்துநடை, வியக்கவைக்கும் தகவல், முடிவில் பிரமிப்பு ஆகியவற்றால் தன் எழுத்துப் பணிகளில் தனக்கென தனிஇடத்தையும் தவிர்க்க முடியாத வாசகர் வட்டத்தையும் பெற்று சிறந்து விளங்கினார்.

குர்ஆனைப் படித்தவர்களெல்லாம் சிந்தனையாளர்களல்ல; ஆனால் சிந்தனையாளர்கள் குர்ஆனைப் பற்றி அறியாமலிருக்க முடியாது. ஆகவே தான் குர்ஆனின் கூப்பாடுகள் சிந்திப்பீராக/சிந்திக்க மாட்டீர்களா? என்று சிந்தனையாளர்களை நோக்கியே இருக்கின்றன. குர்ஆன்-003:058 என்ற திருக்குர்ஆன் வரிகளுக்கேற்ப சுஜாதாவும் திருக்குர்ஆனின் நறுமணத்தை நுகர்ந்தவர்களில் ஒருவர் என்ற தகவல் பலருக்குத் தெரிந்திருக்கக் கூடும்.

Pages 9« 3456789 »
 
வருகைத்தந்தவர்கள்