September 23, 2018

கணக்கு புதிர்கள் - 4


புதிர் எண் 1.

வேலை முடிந்த களைப்புடன் மூன்று நண்பர்கள் சிற்றுண்டி சாலைக்கு சாப்பிட சென்றனர். சாப்பாட்டிற்காக இட்லிகளை ஆர்டர் செய்தனர்,  அப்படியே அவர்கள் களைப்பில்  தூங்கிவிட்டனர். 

சிற்றுண்டியின் பணியாளர்  இட்லிகளை மேசை மீது வைத்துவிட்டு சென்றுவிட்டார். முதலில் கண்விழித்த நபர் மூன்றில் ஒரு பங்கு  இட்லிகளை சாப்பிட்டுவிட்டு தூங்கினார். இரண்டாவதாக கண்விழித்த நபர் மீதம் இருந்ததில் 
மூன்றிலொரு  பங்கு இட்லிகளை சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டார். பின் மூன்றாவதாக எழும்பிய கடைசி நண்பரும் அவ்வாறே  மீதம் இருந்ததில்  மூன்றிலொரு பங்கு இட்லிகளை சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டார். 

அடுத்த நாள் காலையில் வந்த சிற்றுண்டியின் பணியாளர் எட்டு இட்லிகளை  மேசை மீது கண்டார் எனின், அவர்கள்  ஆரம்பத்தில் ஆர்டெர்  செய்த இட்லிகளின் எண்ணிக்கை எத்தனை?


புதிர் எண்  2.

உங்களிடம்  ஒரு 8 லிட்டர் கொள்ளளவுடைய வாலியும்,  5 லிட்டர் கொள்ளளவுடைய வாலியும்  உங்களிடம் உள்ளது என் வைத்துகொள்வோம். இந்த இரு வாளிகளை பயன்படுத்தி  சரியாக 2 லிட்டர் தண்ணீரை எவ்வாறு பிரித்தெடுப்பீர்


புதிர் எண் 3.

ஒரு எண் உள்ளது, அந்த எண்ணை 9 ஆல் வகுத்தால், 8 மீதி வரும். அதே எண்ணை 8 ஆல் வகுத்தால், மீதி 7 வரும். அதே எண்ணை 6 ஆல் வகுத்தால், மீதி 5 வரும். அதே எண்ணை 4 ஆல் வகுத்தால், மீதி 3 வரும். அதே எண்ணை 3 ஆல் வகுத்தால், மீதி 2 வரும். அதே எண்ணை 2 ஆல் வகுத்தால், மீதி 1 வரும். எனில் அந்த எண் என்ன என்பதை கண்டுபிடித்து, 

எல்லா புதிருக்கான விடைகளையும்  கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.  

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்