November 27, 2017

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!


ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் ‘பாலைவனக்கப்பல்’.

ஏனென்றால், " 'சஃபீனத்-அஸ்-ஸஹாரா ' என்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?" என்றால்... அரபிகள் முழிக்கிறார்கள். ஏதோ சில ஆங்கில அறிவு பெற்றவர்களுக்கு மட்டும் ‘தெ ஷிப் ஆப் தெ டெசெர்ட்’ என்றால் தெரிந்திருக்கிறது. அநேகமாய், தங்கள் மகத்தான கண்டுபிடிப்பான ‘கப்பலில்’, மத்தியதரைக்கடலை கடந்து வடக்கு ஆப்பிரிக்காவில் கால்வைத்த ஐரோப்பியர்கள், ஒட்டகத்தையும் பாலைவனத்தையும் முதன்முதலாக  பார்த்துவிட்டு.. ‘கடலுக்கு கப்பல்பிரயாணம் - பாலைக்கு ஒட்டகபிரயாணம்’ என்று மட்டுமே உணர்ந்து சொன்ன வாக்கியமாக இருக்கலாம்.

October 25, 2017

இஸ்லாமிய பாடல்கள்

1. எல்லா புகழும் இறைவனுக்கு

எல்லா புகழும் இறைவனுக்கு
எல்லா புகழும் இறைவனுக்கு
அல்லா ஒருவனே துணை நமக்கு
துணை நமக்கு…

அருள் மழை எங்கும் பொழிபவனாம் 
மாற்றம் எல்லாம் செய்பவனாம் நல்ல
மான் புகழ் தந்து காப்பவனாம்
காற்றும் மழையும் கதிரவனும்
காற்றும் மழையும் கதிரவனும்
ஆற்றும் பணிகள் எல்லாம்

September 30, 2016

பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டிருக்கிறது - அறிவியல் பதிவு.

(நமது) வலிமையால் வானத்தைப்படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவு படுத்துவோராவோம்.  (திருக்குர்ஆன் 51:47)

இவ்வசனத்தில் வானத்தை நாம் படைத்து அதை விரிவுபடுத்துகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

நாம் வாழ்கின்ற பிரபஞ்சம் அது தொடர்ச்சியாக விரிவடைந்து  கொண்டே செல்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

திருக்குர்ஆன் கூறும் இந்த உண்மையை 20 ஆம் நூற்றாண்டில்வாழ்ந்த ரஷ்ய அறிஞர் அலெக்ஸாண்டர் ஃப்ரைட்மன்
என்பவரும்,  பெல்ஜியம் அறிஞர் ஜார்ஜியஸ் லமைட்ரெ என்பவரும் கண்டறிந்துள்ளனர்.

June 9, 2016

ஈக்களை பற்றிய அறிவியல் பதிவு.

உங்களால் ஒரு ஈயை கூட படைக்க முடியாது! ( திருக்குர்ஆன் 22:73)
ஈக்களை பற்றிய அதிக தகவலுடன் கூடிய அறிவியல் பதிவை இன்று நாம் பார்ப்போம். ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல விலங்கியல் ஆய்வாளர் ஒருவர் : “ஈக்கள் பொதுவாக அசிங்கமான இடங்களிலும் கழிவுகளிலும் அதிகம் வாசம் செய்வதால் அவை கிருமித் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் ஈ இனமே அழிந்துவிடும் சாத்தியம் இருந்தும்கூட அவை எப்படித் தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றன என்ற கேள்வி அறிவியல் ஆய்வாளர்களுக்கு எழுந்தது. அதற்கான காரணத்தை அறிய ஆய்வுகளை மேற்கொண்டனர்எனவே ஒரு நாள் எத்தனால் திரவத்தில் கொஞ்சம் ஈக்களைப் பிடித்துப் போட்டு அதில் ஊறவைத்தனர் மறுநாள் அந்தத் திரவத்தைப் பார்த்தபோது அதன் மேல்பகுதியில் ஆடைபோன்ற திரவம் படிந்திருந்தது. அதை எடுத்து ஆய்வு செய்தபோது அது முழுக்க முழுக்க நோய் எதிர்ப்புச் சக்தியின் திரட்டு என்பதை அறிந்துகொண்டனர். ஒப்பீட்டளவில் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவைவிட ஈயின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு பன்மடங்கு அதிகமாகவே உள்ளது.” என்கிறார்.

September 22, 2015

மக்கா உருவான வரலாறு!!!


1) முதல் மனிதர் ஆதம் அவரது மனைவி ஹவ்வா அவர்கள் பூமியில் இறக்கபட்ட இடம் மக்காவாகும். 

2) தங்கள் இறைவனை வணங்க தாங்கள் வாழ்ந்த இடத்தில் எழுப்பிய முதல் இறையில்லம் கஃபா இருக்குமிடமாகும்.

3) அவர்கள் அந்த பூமியில் வெறும் 40 வருடமே வசித்ததாகவும் பின் அல்லாஹ்வின் அருளை தேடி வேறு இடம் சென்றதாக ஹதீஸ் உள்ளது.

4) அதற்க்கு பின் அவர்கள் மூலம் மக்கள் பெருகினர்.. உலகம் முழுவதும் பல திசைகளில் பரவினர்.. ஆனால் இந்த மக்கா மனிதர்கள் வசிக்க அடிபடை தேவையற்ற பாலைவனமாகவே ஆள் நடமாட்டம் இன்றி இருந்தது.

May 21, 2015

சிங்கப்பூரார்களை நேருக்கு நேர் மோதி ஜெயிப்பது வெகு சிரமம்.

சிங்கப்பூரில் இருபது வயது நிரம்பிய ஒரு இளைஞனை மற்ற நாட்டு இளைஞர்கள் நேருக்கு நேர் மோதி ஜெயிப்பது வெகு சிரமம்.
ஏன் என்று கேட்கிறிர்களா....? 
இதோ அதற்கான விடை...

சிங்கப்பூர்வாசிகளின் பிள்ளைகள் அனைவரும் 18 வயதை தொடும்போது மூன்றாண்டுகள் அவர்கள் கட்டாய ராணுவ பயிற்சியில் ஈடுபட்டே ஆகவேண்டும். இதற்கு National Service- தேசிய சேவை என்று பெயர்.

இதில் பணக்கார வீட்டு பிள்ளைகள், ஏழை வீட்டு பிள்ளைகள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. பிரதமர் வீட்டு பிள்ளையாக இருந்தாலும் இந்த பயிற்சிகளை மேற்கொண்டே ஆக வேண்டும்.

November 7, 2014

கணக்கு புதிர்கள் - 3

புதிர்#1). ஒரு தக்காளி  வியாபாரி தக்காளிபழங்களை கூறு கட்டி விற்க பார்க்கிறார் அவர் வைத்திருக்கும் தக்காளிபழங்களை,  இரண்டிரண்டாக கட்டினால் ஒரு தக்காளிபழமும், மூன்று மூன்றாக கட்டினால் இரண்டு தக்காளிபழங்களும், நான்கு நான்காக கட்டினால் மூன்று தக்காளிபழங்களும், ஐந்துஐந்தாக கட்டினால் நான்கு தக்காளிபழங்களும்,  
ஆறு ஆறாக கட்டினால் ஐந்து தக்காளிபழங்களும் மீறுகிறது. ஏழு ஏழாக கட்டினால் மட்டுமே சரியாக கட்ட முடிகிறது.

அப்படியானால் அவர் எவ்வளவு தக்காளிபழங்களை வைத்திருந்தார்.

October 29, 2014

உங்கள் கல்வி சான்றிதழ்களை HRD & MEA Attestation (சான்றொப்பம்) பெறுவது எப்படி


HRD (Human Resource Development) எளிதில்பெறும் வழிமுறைகள் :

வெளிநாடு வேலைக்கு செல்லும் முன் நமது Certificate HRD யிடம் முத்திரை பெறவேண்டும்.நமது சான்றிதழ் உண்மையானதுதானா என சோதிக்க நமது சான்றிதழ் நாம் படித்த Universityக்கு அனுப்பி வைத்து அங்கு HRD முடித்து வரும்.  

மிகவும் எளிமையான வழிமுறைகள் கொண்ட HRD செய்வதற்கு நம்மில் பலர் முயற்சி செய்யாமல் இடைதரகர்களிடம் பணத்தை கொடுத்து முடித்து விடுகின்றனர். நாம் நேரடியாக சென்று Apply செய்தால் ₹535 ல் முடிந்துவிடும். இடைத்தரகர்கள் ₹3000 முதல்₹4000 வரை கேட்பார்கள்.

October 17, 2014

உங்கள் கண்களை 1 நிமிடத்தில் பரிசோதிக்க இதோ எளியவழி

இது  ஒரு  எளிமையான, உங்கள் கண்களின் நிறப்பார்வையின் தரத்தை சோதிக்கும் ஒரு விளையாட்டு. கீழ்  உள்ள ஸ்டார்ட் (START) பட்டனை அழுத்தி கட்டத்தில் தெரியும் வேறுபட்ட நிறத்தை கண்டுபிடித்து  (அழுத்த) கிளிக் செய்ய வேண்டும். ஒரு  நிமிடத்திற்குப்பிறகு உங்களுக்கான மதிப்பெண் (Score) வரும், அது


35  க்கு மேல் இருந்தால்                    =  கழுகு கண்கள்
21 லிருந்து,  34 க்குள் இருந்தால்   =  சாதாரண கண்கள்
11 லிருந்து,  20 க்குள் இருந்தால்    =  பலவீனமான கண்கள்
10 இக்கு குறைவாக இருந்தால்     =  மருத்துவரை அணுகி  உங்கள் கண்களை  
                                                                         சரிபார்த்துக்கொள்ளவும்

உங்கள் கண்களின் தரத்தை அறிய இப்பொழுதே அமுக்குங்கள்... அந்த ஸ்டார்ட் (START)  பட்டனை....

September 11, 2014

ஒரு ரூபாயில் ஓர் உயிர்

இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், தனியொரு நபராக இருபத்தி நான்கு மணி நேர மருத்துவச் சேவை புரியும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இத்தனைக்கும் அவர் ஒரு டாக்டரோ, நர்ஸோ கிடையாது. பள்ளியில் வெறும் எட்டாம் வகுப்பை மட்டும் முடித்திருக்கும் அவர், அப்படியென்ன மருத்துவச் சேவை செய்துவருகிறார்? தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் காஜா மொய்தீன், கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் சொந்தமாக ஒரு காலணிக் கடை வைத்திருக்கிறார். மாத வருமானம் பத்தாயிரம் ரூபாயிற்குள்தான். தன் வியாபாரத்திற்கிடையே இவர் செய்துவரும் அந்த அரிய சேவை அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தி, நெகிழவைத்து விடும்.

Pages 9« 1234567 »
 
வருகைத்தந்தவர்கள்