February 1, 2011

மனித உறவுகள் மேம்பட......

குடும்பத்திலும் சரி... அலுவலகத்திலும் சரி... மனித உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும், இதோ சில எளிய வழிகள்...


* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்


* அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும், பின் விளைவு அறியாமலும் 
  பேசிக்   கொண்டே இருப்பதை விடுங்கள்.


* எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசூக்காகக் கையாளுங்கள்.


* விட்டுக் கொடுங்கள்.


* சில நேரங்களில், சில சங்கடங்களை சகித்து தான் ஆக வேண்டும் என்று  
  உணருங்கள்.



* நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.


* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.


* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே  
  சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.



* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து  
  கர்வப்படாதீர்கள்.



* அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய், ஆசைப் படாதீர்கள்.


* எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம்  
  உண்டோ,   இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.


* கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.


* அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.


* உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் 
  கொள்ளுங்கள்.



* மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கிற நிகழ்ச்சிகளைத் தவறாகப்  
  புரிந்து கொள்ளாதீர்கள்.


* மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய, இதமான 
  சொற்களை  பயன்படுத்தவும் தவறாதீர்கள்.


* புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட 
  நேரமில்லாதது  போல நடந்து கொள்ளாதீர்கள்.


* பேச்சிலும், நடத்தையிலும் திமிர்தனத்தையும், தேவையில்லாத மிடுக்கு 
  காட்டுவதைத்  தவிர்த்து, அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள்.


* பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று 
  காத்திருக்காமல், நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.



* தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல 
  மறக்காதீர்கள்.   பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை; அதுவே,  
  உங்களுக்கு வெற்றியாக அமையும்


நன்றி:- யாழ் 

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்