September 6, 2011

14 நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்படும் அல்குர்ஆன் பிரதிகள்


நிச்சயமாக நாம்தான் இவ்வேதமாகிய அல்குர்ஆனை இறக்கிவைத்தோம். மேலும் நாமே இதனைப் பாதுகாக்கின்றோம். 

(அல்குர்ஆன் - 15:09)


உஸ்மான் (ரழி) அவர்களால் தொகுத்து பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்ட அல்குர்ஆனின் மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 14 நூற்றாண்டுகளாக மூலப் பிரதி பாதுகாக்கப்பட்டுவரும் ஒரே வேதமாகத் திகழ்வது அல்குர்ஆன் மாத்திரம்தான். இப்பிரதி துருக்கி நாட்டின் இஸ்தாம்பூல் நகரில் உள்ள டொப்கொப்பி (Topkapi Museum) அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் காணப்படுவது 11ம் நூற்றாண்டில் வட ஆப்ரிக்காவிலிருந்து பெறப்பட்ட அல்குர்ஆன் பிரதியொன்றாகும். இப்பிரதி தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ல்குர்ஆனைப்பற்றிய சில தகவல்கள் :


மேலும் சில பழமைவாய்ந்த அல்குர்ஆன் படங்கள் :

 Quran manuscript from the 7th century CE, written on vellum in the Hijazi script.
11th Century North African

The first Quran to be translated into a European vernacular language:
 L'Alcoran de Mahomet,    André du Ryer, 1647.

Title page of the first German translation (1772) of the Quran.

                     Ya-Seen in this Chinese Verses 33 and 34 of sura translation of the Quran.

                                      Page of a 13th century Quran, showing Sura 33: 73
Page from a Quran ('Umar-i Aqta'). IranAfghanistanTimurid dynasty, circa 1400.
Opaquewatercolor, ink and gold on paper Muqaqqaq script. 170 x 109cm (66 15/16 x 42 15/16in). Historical region: Uzbekistan

9th Century

The “Quran Exhibition in its 1,400 th Year" on display in Istanbul

Ancient Quran , ( 11th ) , Chinguetti historical library , Mauritania

The Egyptian Edition

Page of Koran in Kufic script on vellum. Pigments and gold on vellum, Sura 4, "Women" from 47 to 58 verse. Middle East  and North Africa, the ninth - tenth century

This is the copy now kept in Tashkent (Uzbekistan). It may be the Imam manuscript or 
 one of the other copies made at the time of 'Uthman.

The Famous "Blue" Qur'an Late ninth or early tenth century CE (c. 300 AH).
Early Manuscripts of the Qur'an

11th century Qur'an

நன்றி:- ஆலிப் அலி 


அல்குர்ஆன் அழியா அற்புதம் 


அல்குர்ஆன் மனித சமூகத்திற்கு நேர்வழிகாட்ட அருளப்பட்ட தன்னிகரற்ற வேத நூலாகும்.அது அல்லாஹ்வினால் ஜிப்ரீல்(அலை) ஊடாக முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கிட்டத்தட்ட இருபத்தி மூன்று வருடங்களாக அருளப்பட்டது.இக் குர்ஆன் இன்று வரைக்கும் எவ்வித திரிபுகளோ,உட்செருகல்களோ இன்றி எழுத்து வடிவிலும்,கோடிக்கணக்கான முஸ்லிம்களது உள்ளங்களிலும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அத்தோடு அல்குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வே ஏற்றுக்கொன்றுவிட்டான்.திருமறைக் குர்ஆன் சொல்கிறது,
“நிச்சயமாக நாமே இவ்வேதத்தை இறக்கினோம் ,அதைப் பாதுகாக்கும் பொறுப்பையும் நாமே ஏற்றுக்கொள்கிறோம்.”
(அல்குர்ஆன் :15:09)
மனித இனத்தைப் படைத்த அல்லாஹ் ,இம்மனிதன் நேரிய பாதையில் நடந்து தான் படைக்கப்பட்டதன் நோக்கத்தை அடைவதற்காக வேண்டி, அடிக்கடி தூதர்களையும்,அவர்களோடு வேத நூல்களையும் இறக்கியருளினான்.ஒவ்வொரு சமூகத்திற்கும் தூதர்களை அனுப்பும்போது , அச்சமூகத்தில் அன்று பரவிக் காணப்பட்ட சிந்தனைகளோடு மோதி அவற்றில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டி சத்திய இஸ்லாமிய வாழ்க்கை நெறியை நிலைநாட்டுவதற்குப் பொருத்தமான அமைப்பில்தான் வேத நூல்களை அருளினான். இதை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“நாம் எந்த தூதரையும் அவர் தனது சமூகத்திற்கு தெளிவுபடுத்துவற்காக அவர்களது மொழியிலேயே தவிர அனுப்பவில்லை.”
அல்குர்ஆன் (14:04)
உதாரணமாக மூஸா(அலை) இன் சமூகமானது மாயஜால வித்தைகளுக்கு அடிமைப்பட்ட சமூகமாக இருந்தது.அல்லாஹ் மூஸா (அலை) க்கு இவ்வித்தைகளை வெல்லும் ஆற்றலைக் கொடுத்தான். அதன் மூலம் அவர் தனது சமூகத்தினரை அடக்கி இவ்வித்தைகள் போலியானவை , அல்லாஹ்தான் நிஜமானவன் என்பதை நிரூபித்து ,அச்சமூகத்தை அல்லாஹ்விற்கு சிரம்பனிய வைத்தார்கள்.ஈசா(அலை) யைக் கூட அவரது சமூகம் குஷ்டரோகியைக் குணப்படுத்தல், பிறவிக் குருடனைக் குணப்படுத்தல் போன்ற சில அற்புதங்களைக் காட்டிய பின்புதான் ஏற்றுக்கொண்டனர்.
என்றாலும் அன்றைய மொழிவிற்பன்னர்கள் இது முஹம்மத்(ஸல்) இன் பேச்சு , பழங்கால கற்பனைக் கதைகள் என்றெல்லாம் குர்ஆனை ஏற்க மறுத்து வாதிட்டனர். இவ்வாதத்தை முறியடிப்பதற்காக வேண்டி , “இக்குர்ஆன் உங்களுக்கு பரிச்சயமான அரபி அச்சர எழுத்துக்களால் உருவாககப்பட்டதுதான் , முடியுமாக இருந்தால் இது போன்ற ஒன்றை உருவாக்கிக் காட்டுங்கள்.” என அல்லாஹ் சவால் விட்டான். இது கட்டம் , கட்டமாக இடம்பெற்றது.


ஆனால் இறுதித் தூதராக அனுப்பப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்களது காலகட்டத்தைப் பொறுத்தளவில் வரலாற்றாசிரியர்கள் அதை “அறியாமை” காலம் என அடையாளப்படுத்துவர். இங்கு அறியாமை என்பது கல்வி,அறிவு ரீதியான இயலாமையல்ல, மாற்றமாக ஒழுக்க, தார்மீக மற்றும் பண்பாட்டியல் இயலாமையினைத்தான் குறிக்கும்.கல்வித்துறையினைப் பொருத்தளவில்,குறிப்பாக மொழித்துறையில் அரபியர்கள் அன்று கொடிகட்டிப் பறந்தார்கள். வருடந்தோரும் இலக்கிய சந்தைகள் நடைபெற்று அவற்றிலே தெரிவு செய்யப்படும் கவிதைகள் காபாவின் சுவர்களில் தங்க எழுத்துக்களால் எழுதி தொங்கவிடப்படும்.இவ்வாறு அறிவு முதிர்ச்சிபெற்ற, பக்குவப்பட்ட ஒரு சமூக அமைப்புக்குத்தான் முஹம்மத்(ஸல்) அனுப்பப்பட்டார்கள். எனவே அன்றைய சமூக அமைப்புக்கு முகம் கொடுக்கக் கூடிய அமைப்பிலும் , இவர் இறுதித் தூதர் என்பதால் எதிர்கால சமூகத்தில் எழக்கூடிய சவால்களுக்கு பதில் அளிக்கும் வகையிலும் வேதம் அமைய வேண்டியிருந்தது. எனவேதான் காலத்தால் அழியாத , நிலைத்து நிற்கக்கூடிய அற்புதமான அல்குர்ஆனை அருளினான்.
முதற் கட்டம்.
“மனிதர்களும் ஜின்களும் ஒன்றுசேர்ந்து அனைவரும் துணையாக நின்று இக்குர்ஆன் போன்ற ஒன்றை உருவாக்க முயற்சித்தாலும் , அவர்களால் முடியாது.”
அல்குர்ஆன் : (17:88)
இரண்டாம் கட்டம்.
“இதனை இவரே ( முஹம்மத்(ஸல்) ) தான் இட்டுக்கட்டினார் என அவர்கள் கூறுகின்றனரா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் , இது போன்ற பத்து அத்தியாயங்களைக் கொண்டு வாருங்கள் .”
அல்குர்ஆன் : (11:13)
மூன்றாம் கட்டம்.
“நம் அடியார் (முஹம்மத்) மீது நாம் இறக்கிய (வேதத்)தில் நீங்கள் சந்தேகத்திளிருந்தால் அதுபோன்றதோர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்………”
அல்குர்ஆன் : (02:23)
இறுதிக் கட்டம்.
“அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் , இதுபோன்றதொரு செய்தியைக் கொண்டுவரட்டும். ”
அல்குர்ஆன்  (52:34)
இவ்வாறு ஆரம்பத்தில் முழு குர்ஆனைப் போன்றதொன்றை உருவாக்க இயலாமல் போக , பத்து அத்தியாயமாவது அல்லது ஒரு அத்தியாயமாவது உருவாக்குங்கள் என சவால் விடப்பட்டது. ஈற்றில் இச்சவால்களுக்கு முன்னால் அவர்கள் மெளனித்துப் போயினர். அன்று விடப்பட்ட சவால் இன்றுவரைக்கும் முறியடிக்கப்படாமல் உள்ளது. அறிவியல் முன்னேற்றங்களும் , தொழிநுட்பத்துறை வளர்ச்சியும் சிகரத்தை எட்டிய நவீன காலத்திலும் பலரும் முயற்சித்து இதில் தோற்றுப்போயினர். அல்குர்ஆன் ஆயிரத்து நானுறு வருடங்களுக்கு முன்னால் விடுத்த சவாலை நிறைவேற்ற முடியாமல் இஸ்லாத்தின் எதிர் சக்திகள் அல்குர்ஆனையும் , முஹம்மத்(ஸல்) அவர்களையும் கட்புல , செவிப்புல ஊடகங்கள் மூலம் கேலிச்சித்திரம் வரைந்தும் , வேறு முறைகளைப் பயன்படுத்தியும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்த நினைப்பது கோலைத்தனமான கவலைக்குரிய விடயமாகும்.
நன்றி:- http://ipcblogger.net/roshan/?p=46

                               அல்குரான் தமிழாக்கம் காண:-  http://tanzil.net/#trans/ta.tamil/1:1

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்