January 3, 2011

நகைச்சுவைகள்

ரசிகர் : எவ்ளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன் சார்
பாடகர் : அப்படியா?
ரசிகர் : பின்ன, அ‌ந்த கஷடத்துல எ‌ன் சின்ன கஷ்டம் ஒண்ணும் பெரிசா தெரியாது பாருங்க
....................................................................................................
எதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி கொண்டு வந்து வைக்கிறே..!
நீங்கதானே மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டப் போறேன்னு சொன்னீங்க..?
.................................................................................................................................
படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள்.ஒர் இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுராமீன்கள்.


தப்பிக்க என்ன செய்வீர்கள்?”


கற்பனை செய்வதை நிறுத்திவிடுங்கள்  .................................................................................................................................

குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா?
நாம கேட்டா அவர் கொடுப்பாரா...
.................................................................................................................................
ஒரு கிராமத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானியிடம் பாமரன் ஒருவன் “என்ன சாமி செய்யறீங்க?” என்று கேட்டான்.
தாவர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கேன் என்றார் அந்த விஞ்ஞானி.
அப்படியா “அப்போ, ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாவுறீங்க .. .?” என்று மீண்டும் கேட்டான் அந்தப் பாமரன்.
.................................................................................................................................
நோயாளி : டாக்டர், என்னால முந்தி மாதிரி நடக்கவோ ஓடவோ முடியலைங்க. உடம்பு பெருத்துக்கிட்டே போகுது.
டாக்டர் : நீங்க முதல்ல கோழி, மீன், ஆடு, மாடுன்னு கண்ணுல்ல பட்டதெல்லாம் சாப்பிடுறதை நிப்பாட்டினால்தான் உங்க உடம்பை காப்பாத்தமுடியும்..
நோயாளி : நான் சாப்பிடுறதையே என்னால கட்டுப்படுத்த முடியலை டாக்டர், ஆடு மாடு சாப்பிடுறதையெல்லாம் நான் எப்படி கட்டுப்படுத்துவது?
.................................................................................................................................
ஹைடெக் டைரக்டர்

எலக்டாரினிக் ஸ்டுடண்ட் படம் தயாரித்தால் என்ன தலைப்பு வைப்பாரு


1. சொல்ல மறந்த ச்ர்க்யூட்

2.எங்க ஊரு டிரான்ஸ்பார்மர்

2. ஒரு ரெசிஸ்டாரின் கதை

3. எனக்கு இன்டக்டர் உனக்கு கெப்பாசிட்டர்

4. மோட்டாருக்கு மறியாதை 

5. சிதம்பரத்தில் ஒரு ஜென்ரேட்டர்

6. தொட்டால் ஸாக் அடிக்கும்

நன்றி :- தமிழ்  நகைச்சுவை  




2 கருத்துரைகள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்ல கலகலப்பான சுவை(யான) - நகைச்சுவை!

Ungal Blog said...

நகைச்சுவையை சுவையுடன் ரசித்தமைக்கு மிக்க நன்றி அண்ணா!!

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்